Saturday 24 January 2015

சிங்கம்புலியும் – புலிசிங்கமும்


மனிதன் புதிது புதிதாக ஒவ்வொன்றையும் உருவாக்க ஆசைப்படுபவன்.
சிங்கம்புலி (Liger) , புலிசிங்கம் (Tigon) இவை இரண்டும் இயற்கைக்கு அப்பாற்பட்டு உருவாக்கபட்ட உயிரினங்கள். அதாவது இவை காட்டில் இருக்கிறதோ இல்லையோ வனவிலங்கு பூங்கா மற்றும் உயிரியல் பூங்காவில் இருக்கிறது.
img09640
ஆண்சிங்கம் பெண்புலியுடன் இணைந்து பிறக்கும் புது உயிரினம் சிங்கம்புலி(Liger).
ஆண்புலி பெண்சிங்கத்துடன் இணைந்து பிறக்கும் புது உயிரினம் புலிசிங்கம் (Tigon).
இந்த லைகர் மற்றும் டைகன் இரண்டுமே சிங்கம்,புலி இவற்றின் குணாதிசயங்களை கொண்டிருக்கின்றன. உதாரணமாக லைகர்கள் நீச்சலடிக்க ஆசைப்படுபவை. இவைகள் இரண்டையும் பார்த்தால் வித்தியாசப்படுத்த கொஞ்சம் யோசிக்கனும் உடலில் புள்ளிகள் மற்றும் வரிகள் காணப்படுகிறது. லைகர்கள் தம் பெற்றோரை விட இரண்டு மடங்கு பெரிதாக வளர்கிறது.
img038972
இவற்றை திபெத்திய புத்த பிக்குகள் (லாமாக்கள்) வளர்த்தால் சைவமாக மாற வாய்ப்பு உண்டு !.
இந்த படத்தில், தாய்லாந்து காஞ்சனபூரி புலி கோவிலில்.. புத்த பிக்குகள் வளர்த்தும் புலிகள்.
தற்போது உலகிலேயே பெரிய லைகர் 500 கிலோகிராம் எடையுடன் 10 அடி நீளத்துடன் இருக்கிறது.

369799liger1



இவற்றிற்கு மரபியல் சம்பந்தமான(Dwarfism,gigantism) உடற்குறைகள் அதாவது தாறுமாறான உடல் உறுப்பு பெருக்கம் அல்லது வளர்ச்சி இருப்பதாக சொல்லப்படுகிறது, கண்காணித்து வருகிறார்கள். அதோடு கூட வாழ்நாள் அவற்றின் பெற்றோரை போல் இருக்காது. இதற்கு இன்னும் மரபியல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

இந்தியா – 3ஆம் உலக யுத்தத்தின் பின்னர்!! – நொஸ்ராடாமஸ்



wcஇப் படத்தில் ஒரு சக்கரம் சுலற்றப்படுவது போல் காட்டப்பட்டுள்ளது…
இது 3ம் உலக யுத்தத்தின் பின்னர், நாடுகளின் நிலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்களாக கருதப்படுகின்றது.
இப்படத்தில்…
கீழ் புறத்தில்… ஒரு கிரீடம் கை நழுவி விழுவது போல் காட்டப்பட்டுள்ளது. அதனருகிலேயே… கழுகு ஒன்றின் உருவமும் வரையப்பட்டுள்ளது.
இப்படமானது… அமெரிக்காவின் வீழ்ச்சியை குறிப்பதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
ட்ராகன் போன்ற உரு மேல் நோக்கி போவது சீனாவின் நிலையை காட்டுகிறது என கருதப்படுகிறது.
மேலும்… சக்கரத்தின் மேலுள்ள கடிகாரம் ( முன்னைய காலங்களில் மணல் மூலம் நேரத்தை கணிக்க பயண்பட்ட கடிகாரம்) இது காலத்தால் ஏற்படப்போகும் மாற்றம் என்பதை குறிக்கிறது. அடுத்து… வாணில் இருந்து வரும் கையே இச் சக்கரத்தில் திருப்பத்தை ஏற்படுத்துகின்றது. இது எல்லாம் இறைவனின் செயல் என்பதை குறிப்பதாகும். ( நொஸ்ராடாமஸ் இறைவன் மீது நம்பிக்கையுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. )
இப்படத்திலுள்ள ஏனைய உருக்களுக்கான விளக்கம் இன்னமும் தெளிவாக(??!!) விளக்கப்படவில்லை.
நொஸ்ராடாமஸின் நான்கு வரி குறிப்புக்கள் பலவற்றில் இந்த மாற்றம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
3 ம் உலகயுத்தம்
3 ம் உலகயுத்தம்
அதாவது…
பக்கத்து பக்கத்து நாடுகளினால் ஏற்படப்போகும்… 3 ம் உலக யுத்தத்தில்… பிரான்ஸ், இத்தாலி, பிறிட்டன் போன்ற நாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக தோல்வியை சந்திக்கும். மொத்த ஐரோப்பா கஷ்டங்களுக்கு உள்ளாகும். அதே வேளை இதை சாதகமாக பயண்படுத்தி ஆசியா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளை சேர்ந்த நாடுகள் முன்னேற்றமடையும்.இன்று எவ்வாறு ஈரோப் இருக்கிறதோ… அவ்வாறானதொரு நிலையை ஏஸியா அடையும். மக்களின் வாழ்க்கைதரம் முற்றாக மாறிவிடும். எனும் பொருள் பட கூறியுள்ளாராம்.
இனி வரப்போகும் இந்திய தலைமுறை… அவர்களின் பெற்றோர் நினைச்சு பார்க்காத அளவுக்கு நுட்பம் வாய்ந்தவர்களாக உருவாகுவார்கள்… எனவும் கூறப்பட்டுள்ளதாம்.
2027ம் ஆண்டில்… உலகின் முதல் நிலை வல்லரசாக இந்தியா, சீனா திகழும் என கூறப்பட்டுள்ளதாம்.
dsa
இரண்டாம்  படமும் 3 ம் உலகயுத்தத்தினால் ஏற்பட போகும் பேரவலத்தையே குறிக்கின்றது.
இந்த பேரழிவால் பிரபஞ்சத்தில் ஏற்படப்போகும் மாற்றத்தை குறிக்கிறது. ( கோஷ் தியரிப்படி/ பட்டர் ஃப்லை இஃபக்ட் படி).
மூன்றாம் படம் பழைய நிகழ்ச்சி சம்பந்தமான படம்….
பிரான்ஸிப்புரட்சியின் போது… 16 லூயி (லூயி ஒகுஸ்ட்த்) சிரச்சேதம் செய்யப்பட்டதை குறிக்கின்றது.
அடுத்த பதிவில், தமிழர் தொடர்பானதாக இருக்கலாம் என கருதப்படும் குறிப்புக்களையும், 3 உலக யுத்தம் பற்றிய மேலதிக தகவல்களையும் உலக அழிவுபற்றிய தகவல்களையும் பார்க்கலாம்.

நொஸ்ராடாமஸும் தமிழ் இனமும்! – விசேட எதிர்வு கூறல்கள் – நொஸ்ராடாமஸ்

 

Tamilஇன்று பலரும் கேட்கும் கேள்வியான ” நொஸ்ராடாமஸ், தமிழர் / ஈழம் பற்றி ஏதாவது குறிப்பிட்டுள்ளாரா?” என்ற கேள்விக்கு பொருந்தக்கூடிய அவரின் கூற்றுக்களை ஆராய்வோம்!
நொஸ்ராடாமஸ் எங்கும் தமிழ் இனம் பற்றி தனியாக குறிப்பிட்டு கூறவில்லை, ஆனால் மூன்றாம் உலகப்போரிற்கு ஒரு சிறிய நாடு வித்திடும் என்றும் ; வேறு ஒரு பகுதியில் அருகருகே இருக்கும் இரு சிறிய நாடுகளால் உலக யுத்தம் மூளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈழம் என்பது தனி நாடாக கருதப்படின், இன்றைய கால கட்டத்தில் “இலங்கை” உலக யுத்தத்தை மூட்டிவிட வல்ல நாடாகத்தான் திகழ்கிறது என்பது சிந்தித்தால் புரியும்.
இலங்கையில் சீனா மற்றும் இந்தியாவின் தலையீடுகள் இருக்கின்றன. ஒரு வேளை இலங்கை முற்றாக சீனாவின் பக்கம் சாய்ந்தால் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா பொருளாதார ரீதியில் அழுத்தங்களை கொடுத்து இறுதியாக மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கொண்டது போன்ற ஒரு யுத்தத்தை ஏற்படுத்தும். ஆனால், அவ்வாறு ஒரு யுத்தம் ஏற்பட்டு “இலங்கை” அமெரிக்காவின் கையில் சிக்குவதை ஒரு போதும் சீனாவும், ரஷ்யாவும் உடன்படாது. காரணம், இலங்கை அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டால், ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் ஒடுக்கப்படும்! – ஆகவே, நொஸ்ராடாலஸின் கூற்று இலங்கையை குறிப்பதாக பல ஐரோப்பிய ஆய்வாளர்களும் கருதுகிறார்கள்.
Tamilஅடுத்து, நொஸ்ராடாமஸின் இன்னோர் குறிப்பில்,
“உலகை ஆண்ட இனமொன்று மீண்டும் ஆழ நினைக்கும்… அதனால், உலக யுத்தம் மூழும் இனம் மீண்டும் ஆழும், அதற்கு அவர்களின் முன்னோர்களின் ஆவிகள் மனதளவில் தூண்டுதலாக இருக்கும்…”
எனும் பொருள்பட குறிப்பிட்டுள்ளார்.
இந்த வசங்கள் பெரும்பாலும் “பிரித்தானியா”விற்கே பொருந்தும் என பல ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர். எனினும், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் உணர்வு பூர்வமான பல செயல்கள் இடம்பெறுவதை காணமுடிகிறது. பல ஆய்வாளர்கள் இப்போது தமிழில் அழிந்துபோன மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டுவர ஆரம்பித்துள்ளார்கள். இதனால், நொஸ்ராடாமஸ் குறிப்பிட்ட அந்த இனம், தமிழ் இனமாக இருக்கலாம் என்று ஜேர்மனிய ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழினம் ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆண்டதற்கான ஆதாரங்கள் வெளிவரும் நிலையில், பல நூறு ஆண்டுகளாக முடங்கிப்போயிருந்த தமிழ் இனம் மீண்டும் ஆளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்

உலக முடிவும் 13 ஆம் இராசியும்! – நொஸ்ராடாமஸ்

உலக முடிவும் 13 ஆம் இராசியும்! – நொஸ்ராடாமஸ் 06 (End)

Coffin of Ophiuchusநொஸ்ராடாமஸ்…
தனது அனைத்து கணிப்புகளையும் வான சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்தே கணித்தார். (அவருக்கு விசேடமாக உணர்ந்து கொள்ளும் தன்மையும் இருந்தது… )
வழமையாக வான சாஸ்திர நூல்களோ… வான சாஸிதிரிகளோ.. 12 ராசிகளைக்கொண்டே கணித்தார்கள்.
ஆனால்; நொஸ்ராடாமஸ் இவற்றிலிருந்து விதி விலக்காக 13 ராசி வட்டத்தையும் உருவாக்கி (?) அதைக்கொண்டே தனது கணிப்புக்களை கணித்திருந்தார்.
அந்த 13 ஆவது ராசியில் இருக்கும் ஒரு நட்சத்திரமே ஃப்பீக்கஸ் நட்சத்திரமாகும். அது இதுவரை வானில் தோன்றியதில்லை. அது வானில் முதல் முதலாக தோன்றும் போது பூமியில் மிகப்பெரிய மாறுதல்கள் நிகழும் என அவர் எதிர்வு கூறியுள்ளார். ( இவ் நட்சத்திரம் 2012 ஆம் ஆண்டு தோன்றும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் தோன்றவில்லை. நட்சத்திரம் புதிதாக வாணில் தோன்றும் போது பூமியில் பாரிய மாற்றங்கள் நடைபெறும் எனும் அவரது கூற்று உண்மையாகவே இருக்கும், காரணம்… எமது கண்ணிற்கு புலப்படும் அனைத்து நட்சத்திரங்களின் ஈர்ப்பு பாதிப்பும் எமது சூரிய குடும்பத்திற்கு உண்டு. ஆகாவே புதிதாக ஒரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிடும்.)
ophiuchus2இங்கு இன்னொரு விடையம்… கி.மு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாயன்களின் இராஜ்ஜிய படிவுகளிலும் இந்த புதிய நட்சத்திரம் பற்றி கீறப்பட்டுள்ளதாம். ( உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.)
எகிப்திய பிரமிட் சுவர்களிலும் வான வெளியை கீறி ஏதேதோ குறிப்பிட்டுள்ளார்கள்… அவை என்ன என சரியாக இனங்கானப்படவில்லை.
அடுத்து… நொஸ்ராடாமஸின் கூற்றுக்களின் படி 7 உலக யுத்தங்கள் நடைபெறும்.
ஏற்கனவே 2 முடிவுற்று விட்டது… இனி வரப்போவது 3 ஆவது… அது 2012 -19 ( சிலர் 2032 இக்குள் என்கிறார்கள்.) ல் வரும் என்று ஒரு ஊகமும் இருக்கிறது.
ஆனால், அத்தோடு உலகம் அழிந்துவிடும் என்று சொல்ல முடியாது.
அப்படி இருக்குமானால், அவரின் குறிப்புக்களில் 7 உலக யுத்தங்களைப்பற்றியும் தெளிவாக கூறியிருக்கத்தேவை இல்லை.
3750 ம் ஆண்டலவிலேயே இந்த 7 ம் உலக யுத்தம் நடை பெறுமாம். அதற்குப்பிறகு பூமி மனிதன் வாழத்தகுதியற்றதாகிவிடும் என குறிப்பிட்டுள்ளாராம்.
——————————————————————————
After-world-endஓ.கே…. மொத்தத்தில் உலக அழிவு பற்றி நொஸ்ராடாமஸ் என்ன சொல்லி இருக்கார் என்று பார்ப்போம்…
40 ( அல்லது 400 குறிப்பு சரியாக இனங்காணப்படவில்லை.) வருடங்களுக்கு பூமியில் ஒரு சொட்டு மழை கூட பெய்யாது… பனிப்பொழிவு நின்றுவிடும்… உலகம் எங்கும் கடுமையான வெப்பம் நிலவும்… அதனால், மரங்கள் தாவரங்கள் என்பன முற்றாக அழிந்துபோகும்… மனித இனமும் இக்காலப்பகுதியில் முற்றாக அழிந்துவுடும்.
அதற்குப்பிறகு…
40 ( / 400)வருடங்கள் தொடர்ச்சியாக மழை பெய்யும்.. ஆனால், அதை அனுபவிப்பதற்கு பூமியில் ஒரு உயிரினமும் இருக்காது…
40 (/ 400) வருட கால மழையைத்தொடர்ந்து பூமி குளிர்ச்சியடைந்து மீண்டும் தாவரங்கள் உருவாகி… உயிரினம் தோன்றும்…
உலகம் புதுப்பிக்கப்படும்…
இந்தக்கூற்று கிறிஸ்தவ மதத்திலிள்ள நோவாவின் கதையோடு ஒத்துப்போக கூடியது… அது பற்றி இங்கு பெரிதாக எழுத வில்லை…. ஆனால், லெமூரியா பதிவில்… நோவாவின் கதைக்கும்…. இந்துக்களின் வேத நூல்களில் கூறப்பட்டுள்ள கதைக்கும் இருக்கும் ஒற்றுமையை நிகழ்கால வரலாற்றுடனும்… லெமூரிய வரலாற்றுடனும் ஒப்பிட்டு பார்த்துள்ளோம்…. இயன்றவரையில் வேறு மதங்களில் இது போன்ற ஒற்றுமைகளை கண்டறிந்து எழுத முற்சிக்கிறோம்.

4D யும் தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டியும் (theory or relativity) – ஏலியன்ஸ்


அன்றும் இன்றும் ஒரு மர்மமாகவும் பரவலாகப்பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு விடையம் “ஏலியன்ஸ் ‘aliens) ” எனும் வேற்றுக்கிரக வாசிகள் பற்றியதாகும். அவ் வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய முழு ஆய்வாக அமைய இருக்கிறது இந்தப்பதிவு. ஏலியன்ஸ் பற்றி பார்க்க முதல் பரிமாணம் பற்றிப்பார்த்தாக வேண்டும்.
பரிமாணம்(dimensions) எனும் போதே… ஐன்ஸ்டைன் (einstein) எனும் மாமேதையையின் “தியரி ஒஃப் றிலேட்டிவிடி ( theory or relativity) ” தொடர்பாக பார்க்க வேண்டியது முக்கியமானதாகும். எனினும்… அதற்கு முன்னர் பரிமாணம் என்பது தொடர்பாக சின்னதொரு அறிமுகத்தை பார்க்கலாம்…
தற்சமயம்…. நீளம், அகலம், உயரம் என்பனவே 3 பரிமாணங்களாக கொள்ளப்படுகிறது. அதாவது… 6 அறிவு படைத்த மனிதனால் உணரத்தக்கதாக உள்ள பரிமாணங்கள் இவையே. (இவற்றை விட காலம் ( டைம்) எனும் நான்காவது பரிமாணம் தியரி ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.)
சினிமாதுறையில் மோஷன் எனப்படும் அசைவுடன் கூடிய தொழில் நுட்பம்… 4ம் பரிமாணமாக கருதப்படுகிறது.
இவற்றை விட இன்னும் பல பரிமாணங்கள் இருக்கலாம்( இருக்கும் )…. என்பது விஞ்ஞானிகளின் கருத்து. ஆனால், எமது அறிவினாலோ… அல்லது எமது தோற்றத்தாளோ அவற்றை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றது என்பதே… உண்மை.
சரி… நாம் எம்மால் உணர முடியாத பரிமாணங்களை விடுத்து. தியரி றீதியிலாவது ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் எனும் பரிமாணத்தை ( ஐன்ஸ்டைனால் வெளியிடப்பட்டது.) பற்றி முதலில் பார்ப்போம்….
காலம் தொடர்பாக விளக்குவது கடிணமானதாக உள்ளது. ( எழுத தொடங்கிட்டன் இப்பதான் விளங்குது… ) இயன்றவரை விளக்குகிறேன். ( தெளிவாக விளக்க தெரிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டம் மூலம் விளக்கவும். பிளீஸ்…)
ஒரு மனிதன் ஒரே தூரத்தை நடந்து கடப்பதுக்கும்… காரில் கடப்பதுக்கும்… ரெயினில் கடப்பதுக்கும் வித்தியாசமுள்ளது.
நடப்பதை காட்டிலும் ரெயினில் பயணிக்கும் போது நேரம் மிச்ச படுத்தபடுகிறது. நடக்க 1 மணி நேரம் எனின்… ரெயினில் 5 ஓ 10 ஓ நிமிடம்தான் எடுக்கிறது. எனவே, இரு இடங்களுக்கிடையே தூரம் வித்தியாசபட வில்லை. காலம் வித்தியாசப்படிகிறது.
இதை ஐன்ஸ்டைன் சிம்பிலாகவும்… சுவாரஷ்யமாகவும் கூறியுள்ளார்…
அதாவது…
ஒரு காதலன் தனது காதலிக்காக வெயிட் பண்ணும் போது… 1 நிமிடம் என்பது மிகப்பெரிய காலப்பகுதியாக தோன்றுகிறது. அதே, காதலி வந்ததும்… அந்த 1 நிமிடம் ஒரு மிக சிறிய விரைவாக கடந்துவிடும் பகுதியாக தோன்றுகிறது. ( இதை தான் நமது கவிஞர்களும் திரைப்பட பாடல்களில் அடிக்கடி பயன்படுத்துவார்கள்… உன்னை காணாத நொடி யுகம் என்றும்… கண்டா யுகம் நொடி என்றும் ஓவர் பில்டப் கொடுப்பாங்க…)
( இதற்குமேல் என்னால் விளக்க முடியவில்லை… :( )
சரி… இனி தியரி ஒஃப் ரிலேட்டி விட்டியில் ஐன்ஸ்டைன் என்ன சொன்னார் என்பதை எனக்கு விளங்கிய (???) வகையில் சொல்ல ரைபண்ணுறன்.
தியரி ஒஃப் ரிலேட்டிவிட்டி
—————————————————————————————–

—————————————————————————————–
அதாவது ஒளியின் வேகத்தில் (3*10^8 மீட்டர்/ செக்கன் அல்லது 3 ம் 8 சைபரும் ) எம்மால் பயணிக்க கூடியதாக இருந்தால்… எம்மால் இறந்த காலத்துக்கு செல்ல முடியும். அதாவது… தற்போது 2010 ஆம் ஆண்டு எனின்… நாம் ஒளியின் வேகத்தில் பயணிப்போமானால்… 2000… 1990… அப்படியே எமது இறந்த காலத்துக்கு செல்லலாம்.
இது நான் விளங்கி கொண்டது மட்டுமே.
(இதே தியரியில் மறை வேகம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அது என்ன வென்றே விளங்கல… விளங்கினவங்க சொல்லித்தாங்க…)
ஆனால்… என்னை பொறுத்த வரையில்… ஒளியின் வேகத்தில் (சரியாக) பயணிக்கும் போது எம்மால் பின்னோக்கி செல்ல முடியாது. ஆனால், எமக்கு காலம் ஓடும் வேகம் 0 ஆக இருக்கும். அதாவது… வெளியுலகத்தாருக்கு… காலம் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் ஒளியின் வேகத்தில் செல்பவருக்கு காலம் ஓடாது.
2010 இல் நாம் ஒளியின் வேகத்தில் புறப்பட்டோம் எனின். 10 வருடத்தின் பின்னரும் நாம் அதே 2010 இல் தான் இருப்போம். ஆனால்… மற்றவர்கள் 2020 இக்கு போயிருப்பார்கள். ( ஸபா… நினைக்கவே கண்னக்கட்டுது… என்னன்டு தான் அந்த மனுசன் ஜோசிச்சுதோ…)
ஆனால்… நாம் ஒளியின் வேகத்தை தான்டி… ( 3*10^8 ஐ மிஞ்சி) பயணிக்கும் போது… நாம் இறந்த காலத்துக்கு போவது சாத்தியம்…
2010 இல் வெளிக்கிட்டோமானால்… 2009 இக்கோ… 1800 இக்கோ நாம் போகலாம்… அது நாம் ஒளியின் வேகத்தை விட எவளவு அதிகமான வேகத்தில் பயணிக்கிறோமோ என்பதை பொறுத்தது.
10 வருடகாலப்பகுதியிலோ அல்லது சில மணிப்பொழுதிலோ நாம் இறந்த காலத்திற்கு போகலாம்… ஆனால் நாம் பயணிக்கும் வேகம் தான் முக்கியமானது.
நாம்… தற்சமையம் மக்ஸிமம் 70,220 மீட்டர்/ செக்கன் ஐயே அடைந்துள்ளோம் இதுவும் இறுதிவேகம் தான்… சராசரிவேகமல்ல. ( Helios 2). இது கூட மனிதன் பயணிக்க உகந்ததல்ல…
சாதாரணமாக மனிதனுக்கு உகந்ததாக 900 கிலோமீட்டர்/ ஹவர் தான் தற்சமையம் உள்ளது என நினைக்கின்றேன். (Airbus A380.).
ஆகவே… எமது வாழ்னாளில் நாம் பின்னோக்கி பயணிப்பது சாத்தியமே இல்லை….
( பேந்து ஏன் இதை எழுதுராய்… என சிலர் கேட்பார்கள்… ஹி… ஹீ…. நான் இந்த தியரியை வைத்து தான் எல்லாத்தையும் சொல்ல ரைபண்ண போறன். அதுக்கு தான் இதை சொன்னன். ஆனால், எழுதுறதுல ஒரு இடத்துலயும் பொய் என்றோ… லொஜிக் இல்லாமல் இருக்கு என்றோ நீங்கள் நினைக்கும்படி எழுத மாட்டன்… )
சரி… இன்னும் நான் சொன்ன தலைப்புகளினுள் புகவில்லை….
அதால… முதலாவதாக… ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரக வாசிகள் சம்பந்தமாக ஆராய்வோம் (???)…
இந்த பிரபஞ்சத்தில் எம்மை தவிர வேறு உயிரினங்கள் இல்லை… பூமியில் மட்டும் தான் உயிரினம் வசிக்கிறது….
என நாம் நினைப்பது சின்னப்பிள்ளைதனமானது.
இந்த மிக பிரமாண்டமான பிரபஞ்சம் இக்குணூண்டு அளவுள்ள எமக்காக (பூமிக்காக) மட்டும்தான் படைக்க (???) பட்டது என நினைப்பது எவளவு முட்டாள் தனமானது.
ஆகவே… எம்மை தவிர வேற்று கலக்ஸிகளிலும்… நட்சத்திர குடும்பங்களிலும்… உள்ள கிரகங்களில் உயிரினங்கள் வாழும்.
இங்கு சிலருக்கு ஒரு கேள்வி எள‌லாம்…
எமது விஞ்ஞானிகள் பிரபஞ்சத்துக்கு ஒரு சமிக்ஞை (சிக்னல்) அனுப்பினார்களே… அதுக்கு ஏன் பதில்… அல்லது ரியாக்ஷன் வரல… என்ற கேள்வி எலலாம். ஆனால்… அங்கு தான் ஒரு பெரிய சிக்கலே இருக்கிறது… வேற்று கிரக வாசிகளும் எம்மை போன்றே அதே 3 பரிமாணங்களை கொண்டு இருப்பின் மட்டுமே… அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியும். அடுத்து அவர்களின் தொடர்பாடல் முறை நமது கருவிகளால் உணரப்பட வேண்டுமே!!!
எனவே, வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இல்லை என்பது பொய்…
ஆனால்…
நாம் கூறிக்கொண்டு இருக்கும்… ஏலியன்ஸ் யார்… வேற்று கிரக வாசிகள்தானா??? அல்லது…

காதல் சின்னமும் பின்னனியும்! – சுவாரஷ்ய வரலாறு/கருத்துக்கள்


url-6-14காதல் சின்னம், காதலை வெளிப்படுத்துவதற்கும் காட்டுவதற்கும் பல காலமாக அரச இலையை ஒத்த அமைப்புடைய ஒரு சின்னம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த சின்னம் தொடர்பாக இன்று பார்க்கலாம்.
காதலை வெளிப்படுத்துவதற்கு மேற்படி சின்னம், 13 ஆம் நூற்றாண்டில் இருந்தே பாவணைக்கு வந்ததாக கூறப்படுகிறது. 1250 ல் வெளிவந்த ஃபிரெஞ்சுபுத்தகம் ஒன்றில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இப்போது இருப்பதை விட சற்று வித்தியாசமாக இருந்த அச்சின்னம் பின்னர் மேம்ப்படுத்தப்பட்டு இப்போது இருப்பது போன்ற சின்னம் 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.
இச்சின்னம் எப்படி உருவானது? என பார்ப்போம்.
habitatspa2இச்சின்னம் பற்றி பல கருத்துக்கள் இருந்தாலும், முதன்மை பெறும் கருத்தாக இருப்பது; “பெண்களின் பின் புற வடிவமைப்பை குறிப்பதே இச்சின்னம்” என்பதாக உள்ளது.
இடை சிறுத்து பெண்களின் பின் புற எலும்புகள் அகலமாக இருக்கும் போது, “காதல் சின்னத்தை” தலை கீழாக வைத்த அமைப்பில் இருக்கும். (பின் புற எலும்புகள் அகலமாக இருப்பது பிரசவத்தை இலகுவாக்கவே.) பெண்களின் பின்னழகு ஆண்களில் மனதில் காதல் அலைகளை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது என்பது சமூக ஆய்வுகள் மூலம் எட்டப்பட்ட முடிவு. எனவே, காதலை குறிப்பதற்கு பெண்களின் பின்னழகு சின்னமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பல ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
மேலும் சில கருத்துக்கள் :
cupid368Cupid எனும் ரோமானியர்களின் காதல் கடவுளின் கைகளில் இருக்கும் வில்லை குறிக்கும் அமைப்பாக இது இருக்கும் என ஒரு கருத்துள்ளது.
முத்தத்தின் போது வாய் உதடுகளின் பக்க வாட்டிலான அமைப்பை குறிப்பதாக கருதப்படுகிறது.
இரு அன்னப்பறவைகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ளும் போது உருவாகும் அமைப்பை குறிப்பதாகவும் கருத்துள்ளது.
பிறப்புறுப்பு : பெண்களின் பிறப்புறுப்பை குறித்ததே காதல் சின்னம் எனவும் ஒரு கருத்து உண்டு.
SwansCygnus_olorவிதைகள் : விதைப் பையின் அமைப்பு இக் காதல் சின்னத்தை ஒத்ததாக இருப்பதனால், காதல் சின்னம் விதைப்பையின் அமைப்பை குறிப்பதாகவே இருக்கும் என கருதுகின்றார்கள்.
சிலர் இரண்டு விதைகளும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும் போது உருவாகும் அமைப்புக்கு நிகரானது என்பதாலும் கூறப்படுகிறது.
பெண்களின் அணைக்கப்பட்ட மார்பகங்களை குறிப்பதாக இருக்கும் எனவும் கருத்துள்ளது.
மனித இதையம் : மனித இதையத்தின் ஒரு பகுதி பார்வையே காதல்url-3-29சின்னமாக்கப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. உண்மை இதையம் மென்மையான காதல் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இல்லை என்பதால், சற்று மேம்படுத்தி காதல் சின்னம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ref : listverse, Wiki, cracked (1153)

எம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் “6 விஞ்ஞான பொய்கள்”!


6. வாத்தின் “குவாக்” சத்தம் எதிரொலிக்காது!
duck-qwakபாடசாலைகளில் எதிரொலி பற்றி கற்பிக்கப்படும் போது வாத்து எழுப்பும் “குவாக்” ஒலி விதிவிலக்காக எதிரொலிக்காது என கற்பிக்கப்பட்டது. எனினும் அது தவறு என தற்போதைய விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
உண்மையில் “குவாக்” ஒலி எதிரொலிக்கிறது, எனினும் நமது செவிப்பறையும் (அதனுடன் இணைந்த மூளை நரம்புகளும்) அந்த ஒலியின் மீடிறனிற்கு (frequencies) எதிர்வினையைக்காட்டுவதில்லை! அதனாலேயே வாத்தின் “குவாக்” ஒலி நமது காதுகளுக்கு எதிரொலிக்காததுபோன்று தோன்றுகிறது.
“குவாக்” ஒலிக்கு எதிரொலிப்பு உண்டு என்பது, விசேடமாக தயாரிக்கப்பட்ட எதிரொலி அறை மூலம் நிரூபிக்கப்பட்டது.
5. நாம் அனைவரும் வித்தியாசமானவர்கள்.
everyone-sameபாடசாலைகளிலும், வீடுகளிலும், மன எழுச்சியூட்டும் புத்தகங்களிலும் நாம் ஒவ்வொருவரும் தனித்தனி பண்புடையவர்கள் என கூறப்பட்டுவருகிறது. ஆனால் அது பொய் என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
நாம் வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு மட்டுமே வித்தியாசமாக இருப்பதாகவும்; ஆனால், ஒரே சூழ் நிலையில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு அனைவரும் ஒரே விதமான நடத்தையையே காட்டுவதாகவும் கூறியுள்ளார்கள். அதாவது பிறந்ததில் இருந்து ஒரே விதமான சூழ் நிலைகளை சந்தித்துவாழும் எவரும் ஒரே விதமான மறுமொழிப்பு நடத்தையையே காட்டுவார்கள்.
பல ஆண்டுகளாக பலரிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
4. தினமும் 8 குவளை தண்ணீர் அருந்த வேண்டும்.
8-glassesநமது பாடத்திட்டத்திலேயே இந்த கருத்து இருக்கிறது. எனினும், 8 குவளை நீரின் அளவு என்பது தவறான ஒன்றாகும்.
நாம் உண்ணும் தாவரங்கள், பழங்கள், குடிக்கும் குளிர்பாணங்கள் என்பவையும் உடலிற்கு நீரை தருவிக்கின்றன.
குடி நீர் குடிக்காமல் சாதாரணமான முறையில் தாவரங்கள், பழங்கள், இதர பாணங்கள் குடித்துவந்தாலே ஒரு மாதத்திற்கு மேலாக எந்தவித உடல் கோலாறும் இன்றி வாழமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
3. வெளவாலால் பார்க்க முடியாது.
batஇதுவும் எமது அறிவியல் பாடத்திட்டத்தில் கூறப்பட்டுவரும் ஒரு தவறான தகவலாகும். கூறப்படுவது போன்று உண்மையில் வெளவால்கள் பறப்பதற்கு எதிரொலித்திறன் பயன்படுகின்ற போதிலும், அவற்றிற்கு சாதாரண விலங்குகளைப்போன்று கண்கள் உண்டு. அக் கண்கள் பொருட்களை பார்வையிடவும் உதவும். ஆனால், அவை கண்களின் பார்வைத்திறனை பிரதான ஊடகமாக பயன்படுத்துவதில்லை!
அதாவது நாம் ஒரு பாதையில் செல்வதற்கு கண்களை பிரதான உணர் ஊடகமாகவும் காதுகளை உப உணர் ஊடகமாகவும் பயன்படுத்துவதைப்போன்று வெளவால்கள் காதுகளை பிரதான உணர் ஊடகமாக பயன்படுத்துகின்றன.
2. நிலவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே ஒரு மனித உருவாக்கப்பொருள் சீனப்பெருஞ்சுவர் ஆகும்.
chinawallargeஇது பாட இணைவிதானப்புத்தகங்களிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகும் ஒரு பொய்த்தகவலாகும். உண்மையில் வாணில் இருந்து பார்க்கும் போதே சீனப்பெருஞ்சுவர் தெரிவதில்லை. அப்பலோ விஞ்ஞானிகள் இதை செய்மதிப்பட உதவியுடன் எப்போதோ நிரூபித்துவிட்டார்கள். எனினும் இன்றுவரை இத்தகவல் நம்பப்படுகிறது.
இவ் வதந்தி பரவுவதற்கு முதல் முதலாக வித்திட்டவர் ரிச்சர்ட் ஹலிபூர்டன் ஆவார். பின்னர் பல நாடுகளில் பாடசாலை கல்வி முறையிலும் சேர்க்கப்பட்டது.

1. நியூட்டனின் விதி கண்டறியப்படுவதற்கு அப்பிள் காரணமாகும்.
gravityஎமது பாடத்திட்டத்தில் “அப்பிள் தலையில் விழுந்த கதை” மூலமாகவே நியூட்டனின் விதி அறிமுகப்படுத்தப்படுகிறது. எனினும் நியூட்டனின் புவியீர்ப்பு விதி கண்டறியப்பட்டதற்கும் அப்பிளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நாம் அனைவரும் கற்றுக்கொண்ட அப்பிள் தலையில் விழுந்த கதையை நியூட்டன் எந்த இடத்திலும் சுயமாக குறிப்பிட்டிருக்கவில்லை!

Thursday 22 January 2015

Why Accepting That You’re Not the Best Is the Key to Getting Better By Jennifer Wilson


Medal
“In fear, we expect; with love, we accept.” ~Kenny Werner
It’s easy to let our ego and fear get in the way of our own success. I’m not talking about the aspects of ego that create a desire to “win” over others, which plague some more than others; I’m talking about the more inherent aspects of our inward facing ego that plague us all.
When I was in high school I played a lot of piano. For Christmas one year, my dad (a professional musician) gave me a book called Effortless Mastery.
It was a book that, among other things, taught one how to practice. The author spoke about the importance of learning how to practice in order to improve one’s skill. Sounds like common sense, right? Well, sort of.
You see, most people don’t really like to practice much of anything.
When I was a kid I learned a few really impressive songs on piano. My favorite was “Swanee River” in a boogie-woogie style. I practiced it and practiced it until my fingers could dance around like little people on the keys.
Once I had learned that song, I played it over and over and over again. I used to tell myself I was “practicing,” but really I just enjoyed sounding good, so I would play it repeatedly, never really improving. I had been playing piano for over ten years, but I had never really learned to practice.
Practicing is intentionally sounding bad in order to get better, and what I was doing was performing for myself. Quite a bit of life can be spent performing for oneself, which can act as a real barrier to knowledge, the kind of knowledge that requires vulnerability to acquire.
If all you ever do is perform, then you’re not really learning and growing. If you’re afraid of practicing because you might sound bad or fail, then you will never really master anything.
If you’re not willing to accept being anything but the best, then you will never gain knowledge and develop the skills that come from learning from others who are better than you.
I’ve spent over ten years thinking about that book and reflecting on it in different ways, and I’ve finally learned how to put my thirst for knowledge ahead of fears.
My interests and hobbies have come a long way from when I was a kid. Back then, I took up anything and everything that I was good at. It’s not to say that I didn’t genuinely love the activities I was doing, because I really did, but I wanted to do things that offered me the opportunity to be the best.
My first foray into the realm of activities that I wasn’t naturally gifted in was triathlon. After high school I took up the sport. I had been running all my life. While swimming came very naturally to me, cycling did not.
I began to sort of thrive in the zone of discomfort that I lived in throughout my years cycling. I would ride with people who were so much better than me and they would push me harder and harder every week.
I remember at one point, I had a game going with my cycling buddies where when we reached a hill, they would keep cycling to the top and then back down again, repeating this until I reached the top.
I began to grow a little less uncomfortable knowing that I wasn’t the best at this sport. So much so that I was able to laugh at myself as one by one competitors would pass me on the bike leg of the race, after I had come out on top in the swim.
If you were to look at my life today, you would find a person who participates in a range of activities (in my personal life, my career, and academically), from ones where I excel to those at which I am less than mediocre.
My husband has helped me along on this journey, because he doesn’t have a competitive bone in his body, so I’ve learned to derive enjoyment from things other than winning and to be less afraid of losing.
I’ve taken up things like crafting. I love it and I’m really quite terrible at it. I mean, I can do simple projects, but give me a glue gun and materials and watch out, because I’m bound to mess something up.
I really love rock climbing. I’m middle of the road (and that might be a stretch) within the group of people I climb with. And I recently finished a research project for a degree I was working on and I took up interpretive research, a paradigm that I was completely lost in.
I have learned to take absolute pride in not being the best. As much as I love being a mentor, I’ve discovered that I really love being a student too! I love the vulnerability that is present and how real it feels when I openly acknowledge my weaknesses and areas for improvement.
I’m perfectly okay knowing that I’m not the best, and I’m even more okay knowing that in certain activities, I never will be.
In activities where performing counts (like my career), I’ve learned that it’s okay (even desirable) to make mistakes.
I declare freely when there’s something that I don’t know. Ask me at an interview what my greatest weakness or area for improvement is, and you won’t get a cliché answer that I’m too attached to my work—you’ll get the real deal.
In this territory of discomfort, failure, and ‘sounding bad,’ I have found what it really means to have a willingness to learn.
I accept what I don’t know and learn what I can. I practice many things every day (from communication in my relationships to skills in my career), and as a result, I learn and grow every day.
Here’s how you too can overcome your fears, embrace failure, and learn every day:

1. Try something new that interests you but doesn’t come naturally to you.

I think most people have at least one activity that they might like to try but don’t out of fear of being bad at it.
Maybe it’s singing, maybe it’s drawing, maybe it’s public speaking. Pick an activity that you’re not good at and try it out for a while. Embrace the discomfort and insecurity that you’ll experience being less than the best, and have fun with it!

2. Ask more questions. 

When you ask questions, you display vulnerability; you’re acknowledging that there is something that you don’t know that others do.
Asking questions doesn’t always come easily for people who derive their confidence from a sense of success. Don’t be afraid to ask questions, and ask lots of them. People appreciate sincere questions and the opportunity to teach.

3. Lift others up.

Take some time to tell those around you how great they are, and celebrate in their successes.
Have a friend that you run with who runs faster? Tell them. Have a coworker who has organizational skills that you could learn from? Tell them. Have a significant other who communicates better than you do? Tell them.
Communication is the gateway to learning. When you tell someone about a skill or trait of theirs that you appreciate and could learn from, it empowers them and gives them the confidence to own that skill/trait. The more they own it, the more you can learn from them.

4. Don’t beat yourself up.

When you’re used to being good at everything you do, it’s going to feel very awkward to be less than the best. Don’t allow negative self-talk.
I often catch myself jokingly saying, “I just suck at this” during my weekly rock climbing sessions, but all that’s doing is re-focusing on a win/lose attitude. Instead, speak kindly to yourself, and focus on how much your improving and what you can do rather than what you can’t.

5. Think about the fun you’re having.

Reflect on things that you do in your life and why you enjoy them. Acknowledge the aspects of your life where you derive pleasure out of perfectionism and those where you derive pleasure from other sources.
Those other sources will be the key to finding more enjoyment out of new experiences and activities that don’t involve your ego.

6. Be enthusiastic about failure.

Don’t just accept failure as part of life; welcome it in with open arms! Sometimes the only way to learn is through complete and utter failure. It’s what you do with the failure that counts.
Next time you’re working on something in your life (maybe a work project, maybe a relationship), acknowledge when what you’re doing goes belly up and think objectively about what went wrong. Don’t look at failure as an extension of you; see it as the only journey that leads to true success.
As the great Winston Churchill once said, “Success is the ability to jump from one failure to the next with enthusiasm.”

ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!


பல் பணி (MULTI-TASKING)
பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.)
ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப்பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவணம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! )
மொழி.
பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்!
அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.
பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS)
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும்.
ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.
வாகன‌ம் ஓட்டுதல்.
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.
ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும்.
இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்”ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக்கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.
பொய்ப்பேச்சு!
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை.
காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!
பிரச்சனைக்கான தீர்வுகள்.
பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.
தேவைகள்.
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
மகிழ்ச்சியின்மை.
ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்… அவர்களால், அவர்களின் வேலையில் கவணம் செலுத்த முடியாது.
ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது.
உரையாடல்.
பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.
நடவடிக்கை.
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!
ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள். நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். :

இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்! – Yamaguchi

இரண்டு அணுகுண்டுகளுக்கு தாக்குப்பிடித்த ஒரே நபர்! – Yamaguchi

tsutomu-yamaguchi-2Tsutomu Yamaguchi (திசுதொமு யொமாகுசி) என்ற துரதிஷ்டசாலி பற்றியே இன்று பார்க்கப்போகின்றோம்.
உலக வரலாற்றில் இதுவரை இரண்டு அணுகுண்டுகளே யுத்தங்களின் போது பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். இரண்டாம் உலகயுத்தத்தின் போது அமெரிக்காவினால் ஜப்பான் மீது வீசப்பட்ட இரண்டு அணுகுண்டு தாக்குதலுக்கும் முகம்கொடுத்து தப்பித்த ஒரே ஒரு நபர் Yamaguchi ஆவார்.
மிஷுவிஷி நிறுவனத்தின் வேலை அலுவல்களுக்காக ஹிரோஷிமா (Hiroshima) நகரத்தில் தங்கியிருந்தார் Yamaguchi. அடுத்த நாள் தனது சொந்த ஊரான நாகஷாகி (Nagasaki) இக்கு பயணிக்க திட்டமிட்டிருந்தார். காலையில் நகரத்தை விட்டு வெளியேற தயாராக இருந்த அவருக்கு பயணச்சீட்டை தவறுதலாக அலுவலகத்தில் விட்டு விட்டது அப்போது தான் நினைவிற்கு வந்தது. உடனடியாக அலுவலகம் சென்று பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அப்போது நேரம் 8:15. (6/8/1945)
Tsutomu-Yamaguchi-world-war-2
அமெரிக்க போர்விமான ஓட்டி எனோலா கேய், “Little Boy” என பெயரிடப்பட்ட முதலாவது அணு குண்டை ஹிரோஷிமா நகர மையத்தில் போட்டார்! இதன் தாக்கத்தால் சுமார் 3 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த Yamaguchi இன் பார்வை தற்காலிகமாக அற்றுப்போனதுடன், அவரது உடலின் வலதுபாகங்கள் பெரும்பாலும் எரிந்துபோயின. பின்னர், மீட்பு படையினரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் 3 நாள் சிகிச்சை பெற்ற அவர் தனது சொந்த ஊரான நாகசாகிக்கு மாற்றப்பட்டார்.
9/6/1945 அமெரிக்க போர் விமானி பொஸ்கார் “Fat Man” என்ற இரண்டாவது அணுகுண்டை நாகசாகி மீது போட்டார்!
குண்டு போடப்பட்ட இடத்தில் இருந்து சரியாக 3 கிலோமீட்டர் தூரத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த Yamaguchi, இவ் முறை எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் காக்கப்பட்டார்.
இவ்வாறு, துரதிஷ்ட வசகாம இரண்டு அணு குண்டுத்தாக்குதலுக்கும் உள்ளான Yamaguchi ஐ, 2009 ஆம் ஆண்டு “இரண்டு அணுகுண்டுகளுக்கும் தப்பிய ஒரே நபர் ” என்ற ரீதியில் ஜப்பான் அரசு கெளரவித்தது.
இவர் 2010 ஆம் ஆண்டு தனது 93 ஆவது வயதில் வயிற்றுப்புற்று நோயினால் இறந்தார்.

லெமூரியாவும் தமிழர்கள் இழந்தவைகளும்!

லெமூரியாவும் தமிழர்கள் இழந்தவைகளும்! – Lemuria 09

போன பதிவில்… லெமூரியா, மகாபாரதம், தமிழ், சமஸ்கிரதம் போன்றவற்றுக்கிடையில் நான் வாசித்து,ஊகித்து அறிந்து கொண்ட சில தொடர்புகளை எழுதியிருந்தேன். இன்றும் அவ்வாறான சில சுவார்ஷ்யமான தொடர்புகளை பார்ப்போம்…
——————————————————————————————–
எகிப்திய நாகரீகத்தினை பார்த்தால்…
மிகவும் பிந்தங்கிய நிலையிலிருந்து திடீரென ஒரு மேன்மையான நிலையை எட்டியுள்ளமை விளங்குகிறது.
அவர்களின் தொழில் நுட்ப அறிவு திடீரென இவளவு வீரியம்மிக்கதாக மாறியமை… அங்கு ஒரு புதிய சமூகம் குடியேறியிருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தான் அலெக்ஸ்ஸான்டர் கொஞ்தர்தேவ் எனும் பிரபல தொல்பொருளாராச்சியாலரும் சொல்லி இருக்கிறார். அவர் அந்த சமூகம் தென் பகுதியிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்றும்… அது லெமூரியா கண்டத்திலிருந்து வந்து குடியேறிய சமூகமாக இருக்க வேண்டும் என்றும் தனது குறிப்பில் கூறியுள்ளார்.
( கொந்த்ரதேவ்… லெமூரியா கண்டம் தொடர்பாக நீண்ட கால ஆராச்சியை மேற்கொண்டு சில உண்மைகளை உலகறியச்செய்தவர் என்பதை நான் ஏற்கனவே இந்த தொடரில் எழுதியுள்ளேன்… )
அத்தோடு… வேறு ஆய்வாலர்களும்… மொசபடேனியம்..(???) மற்ற இடங்கள் மறந்துவிட்டன… போன்ற பாதையூடாக எகிப்துக்கும்… இந்திய பகுதிக்கும்… வியாபாரம் நடந்து இருக்கிறதாம்… மேலும்… அரபிக் கடலோரங்களில் எகிப்துக்கு கொண்டுவரப்பட்ட சில பண்டங்கள் காண்டெடுக்கப்பட்டுள்ளன… ( இதில் தமிழ் சுமேரிய எழுத்துக்கள் இருக்கின்றன என இந்த தொடர் பதிவில் ஏற்கனவே குறிப்பிட்டேன்…)
அது இருக்கட்டும்… நாங்கள் எங்களது நூல்களில் இதுகள் சம்பந்தமாக ஏதாவது இருக்கா என்று பார்த்தா… சிலது இருக்கு…
மகாபாரத்தில் நகலனின் மகன்… சுக்ராச்சாரியாரின் ம‌களை திருமணம் முடிக்கிறார்.
ஆனால், நகுலனின் மகன்… விடபமன்னனின் மகளின் மூலம் 3 பிள்ளைகளை பெற்றான்.
இதனால், ஆத்திரமடைந்த சுக்ராச்சாரியார் நகுலனின் மகனை வயோதிபமடையச்செய்கிறார். ( இங்கு தவ வலிமை மூலம் முதுமையடைய செய்வதாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், அது தவ வலிமையாகவுமிருக்கலாம்… அதைவிட முன்னர் வாழ்ந்த அந்த மேம்பட்ட சமூகம்… விரைவில் முதுமையை ஏற்படுத்துவதற்காக ஏதாவது யுக்திகளை கையாண்டதாகவும் இருக்கலாம்… அந்த யுக்திகள் மறைக்கப்பட்டதுக்கு காரணம் நான் ஏற்கனவே போன பதிவில் சொன்னமாதிரி… அனைத்து மக்களுக்கும் அந்த ரெக்னிக் சென்றடையக்கூடாது என்ற உள்னோக்கமாகவே இருக்கும்.)
பின்னர்…
நகுலனின் மகன்… மீண்டும் இளமையை பெற வேண்டுமென்றால்… தனது மகன்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என பரிகாரம் கூறப்படுகிறது. சுக்ராச்சாரியாரின் மகள் மூலம் பிறந்த பிள்ளைகள் இதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கவே… விடபமன்னனின் மகளின் பிள்ளைகளில் ஒருவன் ஒப்பிக்கொள்கிறான். பிறகு… இளமையைப்பெற்ற நகுலனின் மகன்…
தனக்கு உதவ மறுத்த பிள்ளைகளை நாட்டைவிட்டு துரத்துகிறான்…
இவர்களிலிருந்தே யாதவர்களும்… துரியோத‌னின் வம்சமும் உருவாகி இருக்கிறதாம். ( யார்; யார் வழி வந்தவர்கள் என்பது எனக்கு நினைவில்லை/தெரியாது… தெரிந்தவர்கள் கொமென்டில் போடவும்.)
யூதர்களின்… நூலின் படியும்…
ஆபிரஹாம் என்பவருக்கு முதலில் பிள்ளைகள் இல்லை… பின்னர் சேவகி மூலம் பிள்ளைகள் பிறக்கின்றன… நீண்ட கால்த்துக்கு பிறகு… மூத்த மனைவி மூலம் பிள்ளை பிறக்கிறது. மூத்த மகன் வெளியேறுகிறான்… அவன் வழி வந்தவர்கள் அரேபியர்கள்… இளையவன் வழி வந்தவர்கள் யூதர்கள். என கூறப்பட்டுள்ளதாம். ( நன்றி : குமரி மைந்தன்.)
இந்த ரெண்டிலயுமே… ஒரு குழு நாட்டை விட்டு வெளியேறுகிறது…
இந்த யூதர்களின் “தோரா” நூல்…
எகிப்தில்…. அரசு உரிமை பிரச்சனை காரணமாக, ஒரு தொகை அடிமைகளுடன் நாட்டை விட்டு வெளியேறியதாக கருதப்படும் மோஷே (?) வினால் எகிப்திய அரன்மனை நூல்களைப்படித்து எழுதப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரம்… மிசிரத்தானம் என்ற சொல்லிற்கு தமிழ் அகராதி… எகிப்து என்று அழைக்கப்படும் நாடு என கூறுகிறது.
அதற்கான விளக்கப்படியும்… நாட்டால் விரட்டப்பட்ட ஒருவன் மிலேச்சம் எனும் தேசத்துக்கு சென்று அம்மக்களுடன் கலந்து அரசனமையால் ஏற்பட்ட பெயர் என விளக்கப்படுகிறதாம்.
——————————————————————————————–
ஆகவே…
இதன் படி பார்க்கும் போது…
லெமூரியா கண்டத்தில் இருந்து அங்குபோய் குடியேறிய மக்கள் கூட்டத்தாலேயே… எகிப்திய நாகரீகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.
(ஏற்கனவே… லெமூரியாவில் பண்டைய தமிழ் ( தற்போது வெகுவாக மாறி இருக்கிறது ) மொழியே பிரதான மொழியாக இருந்திருக்கலாம் என சில சான்றுகள் மூலம் இப்பதிவில் எழுதி இருந்தேன்… இது அதை மேலும் உறுதிப்படுத்துகிறது.)
ஆனால்… பின்னர் ஏற்பட்ட சுனாமி, கண்ட தாழ்வு, ( அல்லது அணு யுத்தம்(???) ) போன்ற காரணங்களால்… லெமூரியா திடீரென அழிய… எகிப்தியர்கள் முன்னெச்சரிக்கையாக வரலாற்றை திறமையாக பதிந்து வைத்தார்கள். ( அது விளங்கி கொள்ள முடியாத சித்திர எழுத்திலிருப்பது துரதிஸ்டம்.)
மேலே இருக்கும் வரலாற்று சம்பவங்களிலிருந்து இன்னொன்றும் உறுதியாகிறது…
அதாவது… யூதர்களின் தோரா… எகிப்திய நூலகத்திலிருந்து எழுதப்பட்டது என்றால்… எகிப்தை உருவாக்கிய நகுலனின் மக்களின் வம்சத்தினரால்… எகிப்தில் பதியப்பட்ட லெமூரிய (மகாபாரத) வரலாறே… தோராவிலிம் ( இதை கிறிஸ்தவர்கள் “பழைய ஏற்பாடு” என அழைப்பதும் இதைத்தான்.) சில திரிபுகளின் பின்னர் எழுதப்பட்டு இருக்கலாம்…

வொயுனிச் கையெழுத்துப் பிரதியின் மர்ம குறிப்புகள்

வொயுனிச் கையெழுத்துப் பிரதியின் மர்ம குறிப்புகள்

வொயுனிச் ஆச்சர்யங்களை உள்ளடக்கிய 600 வருட பழமையான படங்களுடன் கூடிய கையெழுத்து புத்தகம். 240 பக்கங்கள் கொண்ட இதில், உள்ளவைகளை இன்னதென்றே புரிந்து கொள்ள முடியாத மர்மம் மிக மிக நீண்ட ஆண்டுகளாக இருந்தது (இருந்து வருகிறது !)
img_49wid
பெட்ஃபோர்ட்ஷயர் பல்கலைகழகத்தை சேர்ந்த மொழியியல் பேராசிரியரால் இப் புத்தகத்தில் உள்ள சில குறிப்புகள் விடுவிக்கப்பட்டது என்று சொல்லலாம். (இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை !! ) . 2012 ல் பிபிசியில் வெளியான செய்தியின் பின்னே புத்தகத்திலுள்ளவற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“வொயுனிச் கையெழுத்து புத்தகம்” என இது அழைக்கப்பட்டாலும் இதை எழுதியவர் யார் ?
இந்த புத்தக எழுத்தாளரின் பெயரை விடுவிக்கவே பல வருடங்கள் ஆகியிருக்கிறது.
இறுதியாக அறியப்படும் புத்தக பரிமாற்றத்தின் படி, இப்புத்தகம் வில்ஃப்ரெட் வொயுனிச் ( Wilfrid Voynich ) எனும் புத்தக வியாபாரியால் 1912 ல் விலைக்கு வாங்கப் பட்டது. ஒரு பெரிய டிரங் பெட்டியில் கொண்டு வரப்பட்ட புத்தகங்களில் ஒன்று இந்த புத்தகம். தென் இத்தாலியில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. மேலும் இத்தாலியின் மறுமலர்ச்சி காலத்தை சேர்ந்ததாக இது இருக்கும் என்பது ( 1400 ) கார்பன் சோதனையில் உறுதிப் படுத்தப் பட்டது. வொயுனிச் மறைவு வரைக்கும் இப்புத்தகத்தின் எழுத்துக்களும் தகவல்களும் “அவரால்” தெரிந்து கொள்ள முடியவில்லை என்பது கூடுதல் தகவல்.
img_40k8uio9wid<<<<” inside book view ”
இந்த புத்தகத்தில் அப்படி என்னதான் இரகசியங்கள் இருக்கக்கூடும் ?
நட்சத்திரங்கள், கோள்களைப் பற்றிய தகவல்களும், தாவங்கள் பூக்கள் பற்றிய விவரங்களும், மனித உடல் கூறு (அனாடமி) சம்பந்தமான தகவல்களும், விண்ணியல், இந்த பிரபஞ்சம், பல்வேறு மூலிகைகள்,மருத்துவம்,மருந்துகள், ரெசிபிகள் பற்றிய தகவல்கள் இந்த புத்தகத்தில் உள்ளன.
இப்புத்தகத்தில் இருக்கும் சில விளக்கப்படங்கள் அனுமானதில் இல்லாமல் பார்த்து வரையப்பட்டிருக்கின்றன. உதாரணமாக மைக்ரோ பயாலாஜிகல் சம்பந்தமான படங்கள் (மைக்ராஸ்கோப்பில் மட்டுமே பார்க்கக்கூடிய இமேஜ்கள்) இந்த புத்தகத்தில் உள்ளன. அப்படியாயின் இப்புத்தகம் எழுதிய கால கட்டத்தில் மைக்ராஸ்கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததா ? கூட்டு நுண்ணோக்கியானது கலிலியோவால் 1625 ல் கண்டுபிடிக்கப்பட்டது.
There are other claims that the microscope and the telescope were invented by Roger Bacon in the 1200s but this is not substantiated. Giovanni Faber coined the name microscope for Galileo Galilei’s compound microscope in 1625 (Galileo had called it the “occhiolino” or “little eye”).
நம் கேளக்சியை பற்றிய தகவல்களும் இதில் இருக்கு.
voynich_schaefer_big
<<<<“constellation of Taurus – ஏழு நட்சத்திர கூட்டம் Pleiades cluster”
முதலாம் உலகப்போர் காலந்தொட்டு இப் புத்தக குறியீடுகளை விடுவிக்க பல ஆண்டுகள் பல்வேறு தரப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியில் மொழியியல் வல்லுநர் (Stephen Bax) ஸ்டீபன் பக்ஸ் இப்புத்தக மர்மம் துலங்கப்பட்டதாக அறிவித்தார். முக்கியமாக அம்மொழி எழுத்துக்களை தம்மால் படிக்க முடிந்ததாக தெரிவித்தார். இவர் மட்டுமே புத்தக ரகசியத்தை விடுவித்தார் என்று சொல்வதற்கு இல்லை அவருக்கு முன் பல ஆராய்சியாளர்கள் புத்தக ரகசியத்தை விடுவிக்கப் பாடுபட்டனர்.
“க்ளிப்” என்று சொல்லக்கூடிய 1,70,000 குறியீட்டுப் படங்கள் இப்புத்தகத்தில் நிறைந்துள்ளது. (hieroglyphs )எகிப்திய உருவ (வடிவ) எழுத்துகளை கொண்டிருந்ததன. பல தகவல்களை உள்ளடக்கிய ஒரே குறியீடு ( “குழு குறியிடு”) என்ற வகை பயன்படுத்தப் பட்டு உள்ளது.
[ உதாரணமாக Centaurea என்ற மலர் ” kantairon ” என்ற பெயரால் ஒரு குறியீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. கவுண்டமணி – செந்தில்
ஜோக் ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன் பூவை… புஷ்பம் என்றும் சொல்லலாம் புய்பம் என்றும் சொல்லலாம் !! ]
img_40k21lo9wid
img_40klo9wid
Centaurea என்ற மலர் ( kantairon)
இதிலுள்ள மலர்களை பற்றிய விவரங்களே இதை எழுதியவர் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று இருப்பார் என்பது தெளிவு.
ஒரு மலர் என்றால் அதை மேலோட்டமாக மட்டும் அல்லாமல் அதன் குறுக்குவெட்டு தோற்றம் அதன் உள்ளீட்டின் செல் பகுப்பாய்வு வரை விவரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
இன்றைக்கு ப்ரூப் பார்த்து பிரின்ட் போடப்படும் புத்தகங்களே தப்பும் தவறுகளுமாயிருக்க கையால் எழுத்தப்பட்ட இந்த புத்தகத்தில் தவறுகள் இல்லை (அடித்தல் திருத்தல் கூட) என்பது ஆச்சர்யமானது.
இதில் பயன்படுத்தி இருக்கும் வண்ணங்கள் நிறம் மங்காமல் இருப்பது. பெரிய படங்கள் இப்புத்தகத்தில் பல சீரான மடிப்புகளுடன் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.
இன்னும் இப்புத்தகத்தின் இரகசியங்களை விடுவிக்க பல்வேறு துறை வல்லுநர்களின் உதவியும் தேவைப்படுவதாக குறிப்பிடுகிறார் ஸ்டீபன் பக்ஸ் ( Code remained uncracked !! )
மேலும் சில தகவல்கள்
img_41019wid
புத்தகத்தை எழுதியவர் (Roger Bacon )ரோஜர் பெகான்
காலம் 1214 – 1292 பிரத்தியேகமான மென்மையான ஆட்டு தோல் பேப்பர் போல பயன்படுத்தப் பட்டுள்ளது.
1586 ல் ரோமானிய பேரரசர் ருடால்ஃப் II இதை ரோஜர் பெகான் இடம் இருந்து 600 ட்யூகேட்ஸ் (சுமார் 2 லட்சம் பவுண்டுகள் அப்போதைய மதிப்பு ?? ) கொடுத்து பெற்றுக்கொண்டார்.
1912 ல் நியூயார்க்கை சேர்ந்த புத்தக டீலர் வில்ஃப்ரெட் வொயுனிச் கைக்கு வந்தது.
அதன் பின் இத்தாலிய புத்தக காப்பகத்தில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
1921 ல் பென்சில்வேனியா பல்கலைகழக பேராசிரியர் இப்புத்தகம் வேற்று மொழியில் இருந்து மொழிபெயர்க்கப் பெற்ற பக்கங்களும் படங்களும் இருப்பதாக கண்டறிந்து சொன்னார்.
1978 ல் இப்புத்தகத்தில் இருந்து போட்டோ நகல் வடிவில் The Voynich Manuscript: An Elegant Enigma எனும் பெயரில் Mary D’Imperio என்பவரால் (அல்லது குழுமத்தால்) பிரதி உருவாக்கப்பட்டது
2013 ல் டாக்டர் ரக் ( Dr. Gordon Rugg of Keele University ) என்பவர் புத்தகம் பற்றிய தனது ஆய்வுகளை வெளியிட்டார். (2209)