ஜய பேரிகை கொட்டடா!-கொட்டடா! ஜய பேரிகை கொட்டடா! பயமெனும பேய்தனை யடித்தோம்-பொய்மைக் பாம்மைப் பிளந்துயிரைக் குடித்தோம்; வியனுல கனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம் (ஜய பேரிகை) இரவியி னொளி யிடைக் குளித்தோம்-ஒளி இன்னமு தினைக்கண்டு களித்தோம்; கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம் (ஜய பேரிகை) காக்கை,குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும்,மலையும் எங்கள் கூட்டம்; நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக்களி யாட்டம். மகாகவி பாரதியார். |
No comments:
Post a Comment